Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... அழிந்து வரும் புரதான சின்னங்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் கிறிஸ்துமஸ் விழா கூட்டு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

திருப்பூர்: திருப்பூரில் உள்ள சர்ச்களில், கிறிஸ்துமஸ் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறந்த தினம், அன்பின் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஏசு பிறப்பை வரவேற்கும் விதமாக, ஒரு வாரமாக, தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிகப்பட்டிருந்தன. திருப்பூர் குமரன் ரோடு கத்ரீனாள் ஆலயம், அவிநாசி ரோடு சி.எஸ்.ஐ., சர்ச், குமார் நகர் சூசையப்பர் புனித ஆலயம், நல்லூர் சி.எஸ்.ஐ., சர்ச் <உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.சர்ச்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, அலங்கார குடில் அமைத்து, மாட்டுத்தொழுவத்தில் குழந்தை ஏசு சொரூபத்தை வைத்து, பிரார்த்தனை நடத்தப்பட்டது. பாதிரியார் தலைமையில், திருப்பலி பூஜை நடந்தது. ஏசு பிறப்பை வரவேற்கும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பைபிள் வாசிக்கப்பட்டு, கூட்டு பிரார்த்தனை நடந்தது.காணிக்கை பவனி நிகழ்ச்சியில், நிதி வசூலிக்கப்பட்டது. இத்தொகை, ஏசு பிறந்த ஜெருசலேம், பெத்தலகேமுக்கு அனுப்பப்படும். அடுத்து நடந்த திருவிருந்து பவனியில், அப்பம் வழங்கப்பட்டது. பின், ஆசீர்வாத நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவில் துவங்கி, நேற்று மதியம் வரை நீடித்த சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவிநாசி: அவிநாசி இஸ்மாயில் வீதியில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, கலைநிகழ்ச்சி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஆயர் எட்வின் ராஜ்குமார் தலைமையில், ஆராதனை ஜெபம் நடைபெற்றது. அதன்பின் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்பம், திராட்சை சாறு ஆகியன, கிறிஸ்துமஸ் விருந்தளிக்கப்பட்டது. அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்திலும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar