Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோயிலில் ஆடித்திருவிழா ... தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி ஏராளமானோர் பங்கேற்பு தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 5 : பாவம் தீர்க்கும் நோன்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

பாவம் தீர்க்கும் நோன்பு

அல்லாஹ் குறிப்பிட்ட சில மாதங்களையும், நாட்களையும் சிறப்பாக அமைத்துள்ளான். அவன் உயர்வாக கருதும் மாதங்களில் ஒன்று ரமலான். பாவ மன்னிப்பு பெறுதல், கடவுளுக்கு பயப்படுதல், பண்பாடு மாற்றம் போன்ற நல்ல பலன்களை உருவாக்குவதில், ரமலான் மாதத்திற்கு பங்கு இருக்கிறது. இறைவன் இதற்காக பல வழிகளை காட்டியுள்ளான்.

கடவுள் மீது பயம் இருக்க வேண்டியது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கட்டாயமான பண்பாகும். ரமலானின் நோக்கமே, இந்தப் பண்பை நம்மிடம் வளர்ப்பது தான். அதற்கான பயிற்சியை இந்த மாதம் முழுமையாக அளிக்கிறது.
உடல் தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் முடிச்சுப்போட்டு மனிதனை வதைப்பதை இறைவன் விரும்புவதே இல்லை. ""அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான். கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை என்கிறது குர் ஆன்.
அதேநேரம் நோன்பின் போது பசி, தாகம் ஆகியவற்றை ஒவ்வொரு நோன்பாளியும் அனுபவிக்கிறார்கள். இதுவும் இறைவன் கொடுக்கும் கஷ்டம் தானே என பொருள் கொள்ளக்கூடாது.

ஒரு நோன்பாளி தனக்குள் இறைபயத்தை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு பசியையும், தாகத்தையும் அனுபவிக்கிறார். நோன்பின் போது ஏதாவது பாவங்கள் செசய்ய நேர்ந்தால், "இப்போது நோன்பு இருக்கிறோம், இந்த நேரத்தில் பாவம் செசய்வது தவறு என்ற எண்ணம் உருவாகும். அந்த நேரத்தில் அல்லாஹ்வின் நினைவும் மனிதனுக்கு ஏற்படுகிறது. எனவே பாவங்களிலிருந்து நோன்பு மனிதனை காப்பாற்றுகிறது.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31மணி

11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், 11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு இருந்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் லேத் பட்டறை வைத்து நடத்துகிறார்.இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்க செயலர்.

இவர் கூறியதாவது: கீழக்கரையைச் சேர்ந்த, மறைந்த அரசியல் பிரமுகருக்கும், எனக்கும் கடந்த 2000ல் ரம்லான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது. அந்த ஆண்டு நோன்பு நூற்றேன். அதன்பின் தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். நண்பர்கள் அழைத்த போதும் பணிபளுக் காரணமாக பள்ளிவாசல் செல்ல முடியவில்லை. எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன். இதில் மன திருப்தி ஏற்படுவதுடன், மக்களிடையே நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar