பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், 21ம் ஆண்டு பிரமோற்சவ விழா மற்றும் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா, 16ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக, கோவில் வளாகத்தில் கொடியேற்று விழாவும், ஐயப்பன் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. மறுநாள் காலை, 6 மணிக்கு கணபதி யாகம், உச்சபூஜை , பஞ்சகவ்யம், பகவதி சேவை, கலச பூஜை, கலச அபிஷேகம் ஆகியவை நடந்தன. நிறைவு நாளான நேற்று, ஐயப்பன் கோவில் டிரஸ்ட் சார்பில் மண்டலபூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் ஆகியவை நடந்தன.