Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி ... குருவாயூரில் மஞ்சுளால்தரா மேளம் குருவாயூரில் மஞ்சுளால்தரா மேளம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை புதிய தந்திரி நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு, பதவிக்காலம் முடிந்து நேற்று மலை இறங்கினார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில். இக்கோவிலின் புதிய தந்திரியாக, சமீபத்தில் சதாபிஷேகம் கொண்டாடிய கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. நிறபுத்தரி உற்சவத்திற்காக சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.தற்போதைய தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையைத் திறந்தார். நேற்று அதிகாலை நிறபுத்தரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து சகஸ்ர கலாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. இவற்றை, தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமை தாங்கி நடத்தினார்.

உற்சவம் முடிந்து இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர், நேற்று மலையில் இருந்து கீழே இறங்கினார். புதிய தந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்டரரு மகேஸ்வரரு, வரும் 16ம் தேதி சபரிமலைக்குச் சென்று பொறுப்பேற்பார். புதிய தந்திரியாக பொறுப்பேற்றதும், அவர் ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடையை அன்று மாலை 5.30 மணிக்குத் திறப்பார். ஆவணி மாத பூஜைகளின் சிறப்பாக, லட்சார்ச்சனையோடு புதிய தந்திரியின் பணிகள் துவங்கும். ஆவணி மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar