Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு தியாகராஜரின் 169வது ஆண்டு ... காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: காலை முதல் நெய்யபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: காலை முதல் நெய்யபிஷேகம்!

பதிவு செய்த நாள்

31 டிச
2015
10:12

சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கியது.மாலை 5.00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் கோயிலை வலம் வந்த பின், மேல்சாந்தி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் 18 படி வழியாக இறங்கி சென்ற அவர் கோயில் முன்புறம் உள்ள ஆழி குண்டத்தில் தீ வளர்த்தார். தொடர்ந்து 18- படி வழியாக பக்தர்கள் ஏறி செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜைக்கு பின்னர் நடை அடைக்கப்பட்டு இரண்டு நாள் இடைவெளி ஏற்பட்டதால் நேற்று நடை திறந்த போது 18- படியேற நீண்ட வரிசை காணப்பட்டது.

மகரவிளக்கு கால பூஜைகள் 20 நாட்கள் நடைபெறும். ஜன.,15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல சீசன் தொடங்கிய போது தமிழகத்தில் பெய்த பெருமழையால், பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் மகரவிளக்கு காலத்தில் தமிழகத்தில் இருந்து அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜன., 18-ம் தேதி பகல் 12 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது. அவ்வாறு வரும் பக்தர்கள் நெய்தோணியில் நெய்யை சமர்ப்பித்து விட்டு, அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக வாங்கி செல்லலாம். ஜன.,19 இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar