அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை காளி அம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழா நடந்தது.அவலூர்பேட்டை காளி அம்மன் கோவிலில் கடந்த 5ம் தேதி பூ பல்லக்கு விழா நடந்தது. திரவுபதி அம்மன் கோவிலிலிருந்து 108 பால் குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று காளி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாரதனை மற்றும் இரவு பூபல்லக்கில் வீதியுலாவும் நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.