பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு ஜன.,22 முதல் ஐந்து நாட்களுக்கு பழநி மலைக்கோயிலில் தங்க ரத சுவாமி புறப்பாடு கிடையாது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்று மாலை 5 மணி வரை ரூ.2,௦௦௦ காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் தங்கரதம் இழுக்கின்றனர். தைப்பூச விழா, ஜன.,12-ல் துவங்கி 27 வரை நடக்கிறது. இந்நாட்களில் மலைகோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் ஜன.,22 முதல் 26 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு கிடையாது என பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.