விழுப்புரம்: பூவரசன்குப்பம் சிவன் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் சிவலோகநாயகி சமேத நாகேஸ்வரசுவாமி கோவிலில், ராகு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்மராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு கடந்த 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு அனுக்ஞையுடன் யாகபூஜைகள் துவங்கியது. 7ம் தேதி காலை 7:00 மணிக்கு மகா நவசண்டி ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு சந்திரலேகா, சிம்மிகா சமேத ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனையும் துவங்கியது. காலை 8:30 மணிக்கு பரிகாரஹோமங்களும், மதியம் 12:00 மணிக்கு உற்சவர் ராகுவிற்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:37 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில், ராகுபகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராகு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நாகராஜ குருக்கள், ஆய்வாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல், திருவெண்ணெய்நல்லுõர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது.