பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி கருமாரியம்மன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. காலையில் நவக்கிரக சன்னதியில் உள்ள ராகு, கேது பகவான்களுக்கு 18 வகை அபிஷேகம், புத்தாடை அணிவிப்பு நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ராகு பகவான் சிம்மராசிக்கும், கேது பகவான் கும்பராசிக்கும் பெயர்ச்சியாவதை குறிக்கும் வகையில் அந்த இரு ராசிக்காரர்களுக்கும் சிறப்பு பரிகார பூஜைகள் நடந்தது. பின்னர் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியை சேர்ந்தவர்களுக்கும் எந்தெந்த இடத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்பதை குறித்து அதற்கான நன்மை, தீமைகளை நிவர்த்தி செய்யவேண்டி சிறப்பு பிரார்த்தனையும், அர்ச்சனை வழிபாடுகளும் நடந்தது. இறுதியில் 108 ஸ்லோக வழிபாட்டுடன் பூஜைகள் நிறைவடைந்தது. பக்தசபா தலைவர் சித்ரவேல், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் திருப்பதி, ஜோதிடர் நடராஜன் ஏற்பாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். * வத்திராயிருப்பு காசிவிஸ்நாதர் கோயில், மூவரைவென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் நடந்த விழாவில் ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் செய்யப்பட்டது.