பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
திண்டுக்கல்: திண்டுக்கல் சத்திரம் தெரு, செல்வ விநாயகர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. ஒன்பது நவக்கிரகங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராகு, கேது சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் நடந்தது. வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. கணபதி பூஜையுடன், நவக்கிரக பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் அன்னதானம் நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் விசேஷ பூஜை நடந்தது. மெய்கண்ட சித்தர் குகை, ஓம்கார விநாயகர், மூலவருக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
* வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், திருவாசக முற்றோதலுடன் பால் அபிஷேகம் நடந்தது. விநாயகர், மூலவர், நவக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.