பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. தொரவி கைலாசநாதர் கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை நடந்தது. நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அபிஷேகம் மற்றும் பூஜைகளை சரவணன் செய்திருந்தார். முன்னதாக சாந்தி ஆனந்தன் தலைமையில் மாலதி, அமுதா, அர்ச்சனா, கோவிந்தராஜீ ஆகியோர் திருவாசகம் முற்றோதல் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை புதுச்சேரி காங்., தலைவர் நமச்சிவாயம்,எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவி நாகேஸ்வரி சங்கர் மற்றும் ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.