கிள்ளை: கிள்ளையில் மிகவும் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. கடலுார் மாவட்டம், கிள்ளையில் உப்பு வெங்கட்ராயர் காலத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் வாதிராஜர் என்ற சுவாமிகளால் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்ட்டை செய்து பூஜித்து வந்தார். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மூல நட்சத்திரம் மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை திருப்பூட்டு நிகழ்ச்சியும், 10.00 மணிக்கு விசேஷ அலங்காரம் 12.45 மணிக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். பின்னர் வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் பல்வேறு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு வெங்கட்ராயர் பரம்பரை முரளி தலைமையிலான விழா க்குழுவினர்கள் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் கணேசன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்கதர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.