மணலி:மணலி புதுநகரில், அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின், 36ம் ஆண்டு விழா ஜன., 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, தேரோட்டம் திருத்தலத்தில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. கன்டெய்னர் லாரிகளை போலீசார் முறைப்படுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.திருவிழாவின் இறுதி நாளான நேற்று சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.