காரைக்கால்: காரைக்காலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோதண்டராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். காரைக்கால் மாவட்டத்தில் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை முன்னிட்டு நேற்று முன்தினம் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் திருநள்ளார் நளநாராயண பெருமாள் கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக ஆஞ்சனேயர்களுக்கு பலவகையான திரவாங்கள் கொண்டு ஆபிஷேகம் நடைபெற்றது.பின் சகஸ்ரநாம அர்ச்சனைகளை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்தது.இதில் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை வழிப்பட்டனர்.