Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோயிலில் அனுமன் ... கருமாரியம்மன் கோவிலில் 108 விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரஜோதியையொட்டி புல்மேட்டில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்:கேரள ஏ.டி.ஜி.பி., ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
12:01

கூடலுார்: சபரிமலையில் மகர ஜோதி அன்று, புல்மேடு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து கேரள ஏ.டி.ஜி.பி.,பத்மகுமார் ஆய்வு மேற்கொண்டார். சபரிமலையில் மகரஜோதி விழா நாளை மறுநாள் (ஜன. 15ல்) நடக்கிறது. இதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஜோதியை சபரிமலையில் இருந்தும், புல்மேடு, உப்புபாறை உள்ளிட்ட பகுதியில் இருந்தும் தரிசிக்கலாம்.கடந்த 2010ல் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது, புல்மேட்டில் கூட்ட நெரிச லில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். இச்சம்பவத்திற்குப் பின், புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.ஆம்புலன்ஸ் சர்வீஸ்இந்நிலையில் இந்தாண்டு மகரஜோதியையொட்டி புல்மேட்டில் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் அதிகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் ஆய்வு மேற்கொண்டார். 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கானம் முதல் புல்மேடு வரையுள்ள சாலையில் 150 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுகிறது. குமுளி யில் இருந்து புல்மேடு வரை அடிக்கடி சென்று திரும்பும் வகையில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரஜோதி நேரத்தில் புல்மேட்டிற்கு அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் புல்மேடு பகுதியில் போலீசார் ரோந்து சென்று கொண்டே இருப்பர். இவைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்து, மகரஜோதி விழா நேரத்தில் எவ்வித பிரச்னையும் இன்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, போலீஸ் உயரதிகாரிகளுக்கு அவர் அறிவுரை கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar