புல்மேட்டில் தற்காலிக டவர் :பி.எஸ்.என்.எல்., ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2016 12:01
சபரிமலை,: மகரவிளக்கு விழாவையொட்டி புல்மேட்டில் தற்காலிக டவர் அமைக்க பி.எஸ்.என்.எல். நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரிமலை பொறியாளர் கிருஷ்ணகுமார் கூறினார்.சபரிமலையில் மகரவிளக்கு விழா நெருங்கி வருகிறது. இதற்காக அரசு துறைகள் சார்பில் ஏற்பாடுகள் விரைவாக நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புல்மேட்டில் நடந்த விபத்தை கருத்தில் கொண்டு, புல்மேடு பாதையில் மின்விளக்கு மற்றும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் படி புல்மேட்டில் பி.எஸ்.என்.எல்., சார்பில் தற்காலிக டவர் அமைக்கப்பட்டு வருவதாகவும், இது வரும் இன்று முதல் 16-ம் தேதி வரை செயல்படும் என்றும் சபரிமலை பொறியாளர் கிருஷ்ணகுமார் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: பம்பை, சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தல் அருகே உள்ள ஜோதிநகர், பாண்டித்தாவளம் ஆகிய இடங்களில் உள்ள டெலிகாம் சென்டர்களில் ரீசார்ஜ் கூப்பன்கள் கிடைக்கும், இங்கு எஸ்.டி.டி.பூத் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு இந்தியாவில் எங்கும் பேசமுடியும். ஜோதிநகர் சென்டரில் இன்டர்நெட் பிரவுசிங் வசதியும், பிரிண்ட் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம். சன்னிதானத்தில் மூன்று 3ஜி மற்றும் இரண்டு 2ஜி டவர்களின் கவரேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நாளில் பி.எஸ்.என்.எல்., டெக்னீஷியன்கள் சன்னிதானத்தில் முகாமிட்டிருப்பார்கள். என, கூறினார்.