திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் வசூல் ரூ.5 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2011 12:08
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் திருப்பணி உண்டியல் நேற்று திறக்கபட்டது. அறநிலையதுறை துணை கமிஷனர் அன்புமணி, மேலாளர் இளங்கோ, ஆய்வாளர் சிவாஜி, கண்காணிப்பாளர் மாரிமுத்து, கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் முன்னிலை வகித்தனர். ரொக்கம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 632ம், தங்கம் 75 கிராம், வெள்ளி 240 கிராம் இருந்தது. இதன் மொத்த மதிப்பு 5 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.