Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் ... திருத்தணி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம் திருத்தணி லட்சுமி நரசிம்ம சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்பக ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கற்பக ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2016
11:01

திருப்பூர் : கே.செட்டிபாளையம், டி.பி.என்., கார்டனில், ஸ்ரீகற்பக ராஜகணபதி, நீரூற்று விநாயகர், ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், நேற்று முன்தினம், யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, அண்ணாமலையார் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாரி எடுத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, அதிகாலை, 4:00க்கு, இரண்டாம் கால யாக பூஜை, தத்துவயம் யோஜனம் மற்றும் கலசங்கள் புறப்பாடு நடந்தது. 6:15க்கு, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், ஸ்ரீகற்பக ராஜகணபதி கும்பாபிஷேகம், தச தரிசனம், தச தானம் மற்றும் மகா தீபா ராதனை, அன்னதானம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேகத்தை, ஸ்ரீஅண்ணாமலையார் கோவில் அர்ச்சகர்கள், சிவக்குமார குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் செய்தனர். செந்தமிழ்வேல், ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். ஏற்பாடுகளை, டி.பி.என்., கார்டன் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். கற்பக விநாயகர் கோவில்: திருப்பூர் மங்கலம் ரோடு, கோழிப்பண்ணை, செந்தில் நகரில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நேற்று நடந்தது. 18 முதல், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00க்கு, நிறை வேள்வி, மகா தீபாராதனை, கலச புறப்பாடு நடந்தது. காலை, 9:00க்கு, பரிவார சுவாமிகள் கும்பாபிஷேகம், 10:00க்கு, கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை, தச தரிசனம், தச தானம் மற்றும் அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar