பதிவு செய்த நாள்
13
ஆக
2011
02:08
மேஷம் (செயல் வெற்றி)
எதிர்கால நலனை மனதில் வைத்து செயல்படும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடமான மிதுனத்தில் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். முருகப்பெருமானின் நல்லருளுடன் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் வெற்றி அதிகரிக்கும். பேச்சில் வசீகரமும் புத்திசாலித்தனமும் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் அதிகப்படியான வளர்ச்சிமாற்றம் தவிர்ப்பது நல்லது. பணவசதி நன்றாக இருக்கும். கடன் வகைகளை ஓரளவுக்கு அடைப்பதற்குரிய வழிவகை ஏற்படும். பகைவர்களிடம் விலகிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். தம்பதியர் குடும்ப நலன் சிறக்கும் வண்ணம் ஒற்றுமையாக செயல்படுவர். தொழிலதிபர்களுக்கு சில குறுக்கீடுகள் ஏற்படும் என்றாலும், அவற்றை சரி செய்து விடும் சூழ்நிலைகளும் கைகொடுக்கும். உற்பத்தி சிறந்து திட்டமிட்ட பணவரவை பெற்றுத்தரும். வியாபாரிகள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நடந்து விற்பனையை தக்கவைத்துக் கொள்வர். லாபம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் நிலுவைப்பணியை துரிதகதியில் நிறைவேற்றுவதால் நற்பெயருடன், சலுகை பயன்களும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் உதவி, ஆலோசனை கிடைத்து பணி இலக்கை திறம்பட நிறைவேற்றி சலுகைகளைப் பெறுவர். குடும்பப்பெண்களுக்கு போதிய பணம் இருக்கும் என்றாலும், அத்தியாவசிய செலவுகளை மட்டும் கவனத்தில் கொண்டு சேமிக்க முயன்றால் எதிர்காலத்துக்கு நல்லது. சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் லாபம் கூடும். மாணவர்கள் உடல்நலத்திலும் படிப்பிலும் கூடுதல் அக்கறை கொள்வது நலம் தரும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி வளரும்.
உஷார் நாள்: 3.9.11 இரவு 10.03 முதல் 6.9.11
அதிகாலை 1.52 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 24, 25
நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 6, 7
ரிஷபம் (தேவை பொறுமை)
பிறர் நலனுக்காக மனமுவந்து உதவும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காம் இடமான சிம்மத்தில் அனுகூல பலத்துடன் உள்ளார். புதன் மாத பிற்பகுதியில் சில நன்மைகளைத் தருவார். உடல் சுத்தம், மன சுத்தம் பேணுவதில் முன்னுரிமையுடன் செயல்படுவீர்கள். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாயின் அமர்வும், சனிபகவானின் பார்வையும் பதிவதால் பேச்சு, செயல்களில் மிகுந்த நிதானம் அவசியம். பணவரவு சுமாராக இருக்கும். கடனுக்கு கிடைக்கிறதென்று அவசியமற்ற பொருள்களை வாங்க வேண்டாம். தாயின் மனக்குறைக்கு ஆளாகாமல் நடந்துகொள்ளுங்கள். புத்திரர்கள் வழக்கம்போல படிப்பு, நடைமுறையை மேற்கொள்வர். தம்பதியர் சில விஷயங்களில்எதிர்மனப்பாங்குடன்பேசுகிற நிலை உண்டு. குடும்ப நலனுக்காக பொறுமையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவர். ஓரளவுக்கு லாபம் எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட சற்று சிரமப்படுவர். பணியாளர்கள் பணியில் ஆர்வம் காட்டினால் மட்டுமே எதிர்பார்த்த சலுகைகளை அடைய முடியும்.பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பதால் மட்டுமே கருத்து வேறுபாடு இல்லாமல் இம்மாதத்தைக் கழிக்க முடியும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு சுமாரான விற்பனையும், குறைந்த லாபமும் இருக்கும். அரசியல்வாதிகள்பேச்சு வார்த்தைகளில் எல்லை மீறாமல் செயல்படுவது நற்பலன் பெற உதவும். விவசாயிகளுக்கு அளவான மகசூலும், சுமாரான பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்கள் தொடர்பான பேச்சை
குறைப்பது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை ஏற்படும்.
உஷார் நாள்: 6.9.11 அதிகாலை 1.53 முதல் 8.9.11 காலை 7.20 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 27, 28
நிறம்: ரோஸ், சிவப்பு எண்: 1, 9
மிதுனம் (நகை வாங்குவீங்க!)
குறிக்கோளை நிறைவேற்ற போராடும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன், குரு, ராகு ஆகியோர் நற்பலன்கள் தருகிற வகையில் செயல்படுகின்றனர். ஆனால், ராசிநாதன் புதன் ராசிக்கு இரண்டு, மூன்றாம் வீடுகளில் சிறப்பற்ற நிலையில் பிரவேசிக்கிறார். இதனால் எதிர்மறைபலன் தருகிற செயல்களை செய்திட மனதில் சிந்தனை பிறக்கும். கவனக்குறைவாக செயல்படுவதால் வாழ்வில் சிரமப்பட நேரலாம். பணவரவு நன்றாக இருக்கும் என்றாலும், பிறவகை செலவுகள் அதிகரிக்கும் என்பதால், வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். இஷ்டதெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. எதிரிகள் உங்களுக்குத் தொந்தரவு தருவதை நிறுத்திக்கொள்வர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவர். குடும்பத்தில் சுபநிகழ்வும் ஏற்படும். தொழிலதிபர்கள் தொழில் வளர கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உற்பத்தி இலக்கை எட்டுவர். லாபம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் விற்பனையும் தாராள பணவரவும் பெறுவர். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு சம்பள உயர்வு பெறுவர். அலுவலகத்தில் விண்ணப்பித்த பிற சலுகைகளும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி நற்பெயரும் சலுகைகளும் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணிகளையும் செய்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபம் கூடும். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் விலகி செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் உயர்ந்து கூடுதல் வருமானம் கிடைக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் சிரமங்கள் குறைந்து நற்பலன் உண்டாகும்.
உஷார் நாள்: 8.9.11 காலை 7.21 முதல் 10.9.11 பிற்பகல் 3.10 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 29, 30
நிறம்: சந்தனம், மஞ்சள் எண்: 3, 6
கடகம் (பணத்தட்டுப்பாடு)
நாட்டு நடப்புக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் குணமுள்ள கடகராசி அன்பர்களே!
இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சுக்கிரன், சனி, கேது செயல்படுகின்றனர். சிந்தனையில் ஞானம் பிறக்கும். அதேநேரம், ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் ரேவதி நட்சத்திரம், மீனராசியில் பிரவேசிக்கிறார். இந்த அமர்வால் உடல்நலத்தில் சிறு அளவில் பாதகம் ஏற்படுத்தலாம். கவனம் தேவை. குடும்பச்செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாயின் ஆசியால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். பொறுமையுடன் வழிநடத்துவதால் அவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்புபெறும். பூர்வசொத்தில் நம்பகமானவர்களை குடியமர்த்துவது அவசியம். எதிரிகளின் செயலால் அவமானம் வரலாம் என்று உணரப்படுகிற இடங்களில் விலகிப்போவது நல்லது. தொழிலதிபர்கள் கடும் முயற்சியின் பேரிலேயே உற்பத்தியை உயர்த்த முடியும், லாபம் சுமாராக இருக்கும். பழைய பாக்கி வசூலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பதற்கு நண்பர்கள் உதவி செய்வர். லாபம் ஓரளவுக்கு உண்டு. பணியாளர்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில், எதிர்பார்த்த சலுகைகளைப் பெற இயலாது. பணிபுரியும் பெண்களுக்கு ஓரளவுக்கு சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம், கவனம். குடும்பப் பெண்கள் குழந்தைகளின் மங்கல நிகழ்ச்சிகளை நிறைவேற்ற தேவையான பணிகளில் ஈடுபடுவர். கணவன், மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் தொழில் வளர்ச்சி காண்பர். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். ஒதுங்கி நடப்பதால் நன்மை பெறலாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல், பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். பெற்றோரிடம் விரும்பிய பொருள் கேட்டுப்பெறுவர்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு திங்கள்கிழமைகளில் வில்வமாலை அணிவித்து வழிபடுவதால் உடல்நலம் சீராக இருக்கும்.
உஷார் நாள்: 10.9.11 பிற்பகல் 3.11 முதல் 13.9.11 அதிகாலை 1.20 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 31, செப்.1
நிறம்: சிமென்ட், சிவப்பு எண்: 4, 9
சிம்மம் (பேச்சு... மூச்...!)
முன்னேற்ற வாய்ப்புகளை நழுவ விடாத சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியில் ஆட்சி பலத்துடன் சுக்கிர சேர்க்கை பெற்றுள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, செவ்வாய் உள்ளனர். நடை, உடை, பாவனையில் ஆடம்பரத்தன்மை இருக்கும். அவரவர் தகுதிக்கேற்ப குறைத்துக் கொள்வதால் நன்மை உண்டு. நிறைவேற்ற வேண்டிய பணிகளில் தாமதம் ஏற்படலாம். உங்கள் பேச்சினால் உறவினர், நண்பர்கள் வகையில் கலகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு, பராமரிப்பு பணி நிறைவேறும். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். உடல்நலம் சீராக தகுந்த சிகிச்சை அவசியம். தம்பதியர் அன்புடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பாதுகாத்திடுவர். தொழிலதிபர்கள் புதிய நுணுக்கங்களை செயல்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவர். வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் நல் அணுகுமுறை மாற்றம் பின்பற்றுவதால் மட்டுமே விற்பனை இலக்கு சீராகும். பணியாளர்கள், சக பணியாளர்களின் தனிப்பட்ட குணநலன்களை விமர்சிக்கக்கூடாது. பணி இலக்கு நிறைவேறும். சலுகைகள் வழக்கம் போல் தொடரும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்தாலும், சமயோசிதமாக நடந்து பணிகளை முடித்து விடுவர். சலுகைகள் வழக்கம் போல் உண்டு. குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முன்னுரிமை தந்து குடும்ப ஒற்றுமையைப் பேணுவர். திருமணமாகாத பெண்களுக்கு தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த வங்கிக்கடன் பெற்று வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். விற்பனை அதிகரிக்கும்.அரசியல்வாதிகளுக்கு நிதானமும் அளவுடன் பேசுதலும் நற்பெயர் பெற உதவும். விவசாயிகளுக்கு தாராள மகசூல், கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் வருந்தும்படி நடக்கக் கூடாது.
பரிகாரம்: நரசிம்மரை நாள்தோறும், வழிபட்டால் உறவினர் தொடர்பான சிரமங்கள் தீரும்.
உஷார் நாள்: 18.8.11 காலை 6.01 முதல் 19.8.11 காலை 5.49 மணி வரை மற்றும் 13.9.11 அதிகாலை 1.21 முதல் 15.9.11 பிற்பகல் 12.55 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 2, 3
நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 2, 3
கன்னி (உஸ்ஸ்... எவ்ளோ வேலை!)
ஆடம்பர வசதியை அளவுடன் பயன்படுத்தும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் நற்பலன் தரும் விதமாக கடகத்தில் உள்ளார். பிற்பகுதியில் அவர் விரய ஸ்தானத்திற்கு வருகிறார். இருப்பினும், குருவின் அருட்பார்வையால் சிரமம் குறையும். ராகு, சுக்கிரன் சுப பலன்களை வழங்குவர். பணவரவு ஓரளவுக்கு இருக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றங்கள் எளிதாக நிறைவேறும். தாயின் தேவையை நிறைவேற்றி சந்தோஷம் காண்பீர்கள். புத்திரர்கள் உங்களின் செயல், உணர்வுகளின் போக்கை மதித்து செயல்படுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. தம்பதியர் அவரவர் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவர். தொழிலதிபர்கள் அளவான உற்பத்தி, சுமாரான பணவரவு காண்பர். வியாபாரிகள் கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. சரக்கு கிட்டங்கிகளில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். பணியாளர்கள் வேலைப் பளுவால் மூச்சு திணறுவதுடன், நிர்வாகத்தின் கண்டிப்புக்கும் ஆளாக நேரும். பணிகளை விரைந்து முடிப்பது சிரமத்தை தவிர்க்கும். பணிபுரியும் பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. அவகாசம் தேவைப்படும். குடும்பப் பெண்கள் கணவரிடம் பாசத்துடன் நடந்துகொள்வர். பணவரவு குறைவு என்பதால், சேமிப்பில் கை வைக்க வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை, ஓரளவு லாபம் காண்பர். பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. அரசியல்வாதிகள் பதவி, பொறுப்பு பெறுவதற்கு தேவையான முயற்சியை திறம்பட நிறைவேற்றுவர். நற்பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க கூடுதல் பணம் தேவைப்படும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாணவர்கள் அதிக தரதேர்ச்சி பெறுவர். விளையாட்டு பயிற்சியில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
உஷார் நாள்: 19.8.11 காலை 5.50 முதல் 21.8.11 மாலை 5.02 மணி வரை மற்றும் 15.9.11 பிற்பகல் 12.56 முதல் 17.9.11 இரவு 12.15 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 4,5
நிறம்: பச்சை, நீலம் எண்: 5, 8
துலாம் (உம்ம்ம்... ஜமாயுங்க!)
சமூகத்தில் நேர்மை தழைக்க பாடுபடும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆதாய ஸ்தானம் சிம்மத்தில் அனுகூல பலன்தரும் சூரியன், புதனுடன் உள்ளார். ராசிக்கு இருபுறமும் நட்புக்கிரகங்களான சனி, ராகுவின் அமர்வு பாதுகாப்பு அரண் போல அமைந்துள்ளது. மனதில் எழுச்சிமிகு சிந்தனை உருவாகும். குருவின் பார்வை பலத்தால் நேர்வழியில் நடந்து நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் சொல்லுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். தாய்வழி உறவினரிடம் நல்அன்பு வளரும். சுபச்செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் தகுதி, திறமை வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். அரசு தொடர்பான செயல்பாடுகள் எளிதாக நிறைவேறும். உடல்நலம் பலம்பெறும். தம்பதியர் ஒற்றுமை சிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். நண்பர்களுடன் சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் கூடுதல் உற்பத்தி, தாராள பணவரவு என்ற நன்னிலை பெறுவர். நிலுவைப்பணம் வசூலாகும். வியாபாரிகள், விற்பனையில் முன்னேற்றமும் லாப உயர்வும் அடைவர். புதிய இடங்களில் சரக்கு கொள்முதல் செய்ய வாய்ப்பு தேடிவரும். பணியாளர்கள் சிறப்புற பணிசெய்து தாமதமான சலுகைகளை எளிதில் பெறுவர். சக பணியாளர்களால் உதவி உண்டு. பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை செவ்வனே நிறைவேற்றுவர். பதவி உயர்வு, நிதியுதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் பொறுப்புடன் நடந்து பெருமை சேர்ப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, தரம் உயர்த்தி, கூடுதல் சந்தை வாய்ப்பு பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்ப்பு குறைந்து பணியை சிறப்பாக நிறைவேற்றுவர். சமூக அந்தஸ்து உயர்ந்து எதிர்பார்த்த பதவி, கிடைக்கும். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல், கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் உண்டு. மாணவர்கள் தரத்தேர்ச்சி, பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தில் சுபமங்கல நிகழ்வு ஏற்படும்.
உஷார் நாள்: 21.8.11 மாலை 5.03 முதல் 24.8.11 அதிகாலை 2.27 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 6, 7
நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 2, 7
விருச்சிகம் (ஏன் இவ்ளோ ஸ்பீடு!)
நல்லவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தரும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு எட்டாம் இடமான மிதுனத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். அனுகூல பலன் தரும் இடத்தில் சூரியனின் அமர்வு உள்ளது. செயல் திட்டங்களில் கடும் முயற்சியின் பேரில் வெற்றியடைவீர்கள். சான்றோர்கள், ஆன்மிக குருவின் வழிகாட்டுதலை பின்பற்றி சிரமங்களைக் கடப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக செயல்படுவர்.வாகனம் இயக்கும்போது வேகத்தைக் குறைப்பது அவசியம். புத்திரர்கள் விளையாட்டு குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நலத்தில் சிறுபாதிப்பு வரலாம். பணவரவு சுமாராக இருக்கும். சேமிப்பு பணத்தில் கைவைக்க வேண்டி வரலாம். எதிரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். கவனம். பூர்வசொத்தில் வருகிற வருமானம் சுமாராக இருக்கும். தம்பதியர் வீண் விவாதங்களை தவிர்த்து குடும்ப நலனில் கவனம்கொள்வதால் நன்மை வளரும். மனம் விரும்பாத சூழ்நிலையிலும், ஆடம்பர சவுபாக்கிய வசதி கிடைக்கும். தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பினால் உற்பத்தியை அதிகப்படுத்துவர்.வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்றி அதிகாரிகளிடம் நன்மதிப்பும், சலுகைகளும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் சூழ்நிலைகளை சரிசெய்து பணி இலக்கை நிறைவேற்றுவர். கடன் பெற அனுகூலம் உள்ளது. குடும்பப் பெண்கள் தங்கள் கணவர் பற்றி பிறர் சொல்லும் குறையை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நகைகளை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளுக்காக எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். விற்பனை உயர்ந்து சிறந்த லாபம் உண்டு. அரசியல்வாதிகள் சில விஷயங்களில் அனுகூலம் கிடைக்கப்பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் நிறைந்த பணவரவு உண்டு. மாணவர்கள் உற்சாகமாகப் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் செயல்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
உஷார் நாள்: 24.8.11 அதிகாலை 2.28 முதல் 26.8.11 காலை 9.27 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 8, 9, 10
நிறம்: நீலம், சிவப்பு எண்: 1, 8
தனுசு (செம சேல்ஸ்...)
தெளிவான மனதுடன் பணிபுரிந்து வெற்றிகாணும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக கேது, சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை வளரும். ஆன்மிக நம்பிக்கையுடன் செயல்களை நிறைவேற்றுவீர்கள். பேச்சில் இருந்த கடினத்தன்மை குறையும். சமூகத்தின் பார்வையில் புதிய நம்பிக்கை ஏற்படும். வீட்டில் தகுந்த பாதுகாப்பு நடைமுறையும், வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவதும் அவசியம். புத்திரர்கள் ஆர்வ மிகுதியால் கவனக்குறைவாக செயல்படுவர். உடல்நலம் நன்றாக இருக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பேணிக்காத்திடுவர். நண்பர்கள், உறவினர் குடும்ப சுபநிகழ்ச்சியில் சிறப்பான கவுரவம் பெறுவீர்கள். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். தொழிலதிபர்கள் மாத முற்பகுதியில் உற்பத்தி, பணவரவில் திருப்திகர நிலை காண்பர். பிற்பகுதியில் நிர்வாகச்செலவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அமோகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும், தங்களுக்கே உரித்தான சமயோசிதத்தால் முடித்து விடுவர். நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும். செலவுக்கான பணவசதி சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் வேலைகளைப் பாக்கி வைக்காமல், வேகமாக முடித்து அதிகாரிகளின் ஆதரவும், சலுகையும் பெறுவர். நிலுவைப்பணியை உணர்ந்து முக்கியத்துவம் தந்து நிறைவேற்றுவர். பணியிடத்தில் நற்பெயர் ஏற்படும். குடும்ப பெண்கள தாராள பணச்செலவில் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி இலக்கை உயர்த்த தேவையான பணிகளை மேற்கொள்வர். விற்பனை அதிகரித்து நிறைந்த லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் கூடுதல் லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பு பெற அனைத்து வசதியும் உருவாகும்.
பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
உஷார் நாள்: 26.8.11 காலை 9.28 முதல் 28.8.11 பகல் 2.13 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 11, 12
நிறம்: மஞ்சள், வெள்ளை எண்: 3, 6
மகரம் (வெரிகுட் சில்ரன்!)
ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களிடம் நட்பு கொள்ளும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனிபகவான் ஒன்பதாம் இடத்தில் உள்ளார். நவக்கிரகங்களில் செவ்வாய், ராகு, சுக்கிரன் இந்த மாதம் முழுமையான நற்பலன் வழங்குவர். எந்த செயலையும் அழுத்தம் திருத்தமாக நிறைவேற்றுவீர்கள். பேச்சில் கண்டிப்பு கூடும். இளைய சகோதரர்கள் சுமூக அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை பயன்படுத்துவது போதுமானது.புத்திரர்கள் ஆன்மிக விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். அவர்களது படிப்பிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். உடல்நலம் பலம்பெற சத்தான உணவு கைகொடுக்கும். தம்பதியர் வாழ்வில் சச்சரவு, சந்தோஷம் சமஅளவில் கலந்திருக்கும். தொழிலதிபர்கள் சக தொழில் சார்ந்தவர்களின் அனுபவ ஆலோசனை பெற்று சில மாற்றங்களை நடைமுறைப்படுத்துவர். வளர்ச்சியும் வருமானமும் செயல்களுக்கு ஏற்ப கிடைக்கும். குடும்ப செலவுக்கான பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்து விற்பனை இலக்கை உயர்த்துவர். சரக்கு கிட்டங்கியில் நம்பகமானவர்களை பணியமர்த்துவது அவசியம். பணியாளர்கள் சக பணியாளர்களின் உதவி கிடைத்து பணியில் சிறப்பு பெறுவர். திடீர் சம்பளஉயர்வு உண்டு. பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை அமைந்து எளிதாக இலக்கை நிறைவேற்றுவர். நன்மதிப்பு, சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி நல்ல அணுகுமுறையால் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் இருந்து சிறந்த பாடம் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் காய் நகர்த்துவர். சமூக அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், எதிர்பார்த்த பணவரவு உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் சக மாணவர்களின் உதவியும் கிடைக்கும்.
பரிகாரம்: சூரியபகவானை வழிபடுவதால் உடல்நலமும் தொழில்வளமும் ஏற்படும்.
உஷார் நாள்: 28.8.11 பிற்பகல் 2.14 முதல்30.8.11மாலை 5.21 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 13, 15
நிறம்: வாடாமல்லி, பச்சை
எண்: 5, 8
கும்பம் (டோஸ் விழும் கவனம்)
செயலில் பொறுமையும் மனதில் கருணையும் நிறைந்த கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு அஷ்டமச்சனியின் தாக்கம் ஒருபுறம் இருக்க நவக்கிரகங்களில் புதன் மட்டுமே மாத முற்பகுதியில் நற்பலன் வழங்குவார். எந்த செயலிலும் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது. பேச்சைவிட செயலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை வேண்டும். புத்திரர்கள் உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை, சமச்சீர் உணவுப்பழக்கம் உதவும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. வழக்கு விவகாரங்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் எதிர்கால நலன்பெறலாம். தம்பதியர் குடும்ப விஷயங்களை பிறர் ஆலோசனை பெறாமல் தமக்குள்ளே சரிசெய்வதால் சிரமம் வராது. தொழிலதிபர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதால் மட்டுமே குளறுபடி குறைந்து உற்பத்தி சீராகும். வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் பொறுப்பான செயல்களால் வியாபாரத்தை தக்க வைத்திடுவர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு உடல்நலக் குறைவினால் பணி இலக்கை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு உற்சாகம் குறையும். வேகமாக செயலாற்றினால் தான் உடனே பணிகளை முடித்து அதிகாரிகளின் டோஸில் இருந்து தப்பலாம். குடும்பப் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் வருமானத்திற்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். தாய்வழி உறவினர் வகையில் தாராள சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் மட்டுமே உற்பத்தி, விற்பனையை சராசரி அளவில் தக்கவைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதம் கூடாது. சொந்தப்பணிகள் படிப்படியாக நிறைவேறும். விவசாயிகளுக்கு பயிர் வகையில் உற்பத்தி செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு, பராமரிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். மாணவர்கள் விளையாட்டு குணங்களை தவிர்ப்பதால் மட்டுமே திட்டமிட்ட தேர்ச்சி கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அருகம்புல் மாலை அணிவிப்பதால் தடை விலகி தொழில்வளம் சீராகும்.
உஷார் நாள்: 30.8.11 மாலை 5.22 முதல் 1.9.11 இரவு 9.25 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 28, 29
நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 6
மீனம் (ஞாபகசக்தி கூடும்)
சூழ்நிலையை சாதகமாக மாற்றும் திறமையுள்ள மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன் மிகுந்த அனுகூல பலன்தரும் விதத்தில் உள்ளார். குரு, கேது, புதன் நற்பலன் வழங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். அக்கம் பக்கத்தவரின் நல்அன்பு, உதவி கிடைக்கும். பணவரவு அதிகம் பெற கிடைக்கிற வாய்ப்பை முறையாக பயன்படுத்துவீர்கள். முருகப்பெருமானின் பரிபூரண அருள்கிடைக்கும். வீடு, வாகனத்தில் நெருப்பு சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். கவனம் தேவை. புத்திரர்கள் உங்களின் சொல் கேட்டு நடந்து மனதுக்கு ஆறுதல் தருவர். சத்தான உணவு வகை பயன்படுத்தி ஆரோக்கிய உடல்நலம் காத்திடுவீர்கள். தம்பதியர் சிறு சச்சரவுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பதால் மட்டுமே குடும்பநலன் பாதுகாக்கப்படும். தொழிலதிபர்கள், உற்பத்தியை உயர்த்த, கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவர். தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர் கிடைத்து விற்பனையில் முன்னேற்றம் அடைவர். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் புதிய யுக்திகளை பயன்படுத்தி பணியில் சிறப்பு சேர்த்திடுவர். சலுகை, பாராட்டு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அனுமதியின்றி தோழிகளுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது. குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் குறுக்கீடுகளை சரிசெய்து உற்பத்தி, விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பர். தாராள பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் புகழ், பெயரை தக்கவைத்துக் கொள்ள கூடுதல் பணச்செலவுக்கு உட்படுவர். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பராமரிப்புச்செலவு கூடும். மாணவர்கள் படிப்புக்கான பணவசதி சீராகப்பெறுவர். படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.
உஷார் நாள்: 1.9.11 இரவு 9.25 முதல் 3.9.11 இரவு 10.02 மணி வரை
வெற்றிநாள்: ஆகஸ்ட் 21, 22
நிறம்: மஞ்சள், கருநீலம் எண்: 3, 8