பதிவு செய்த நாள்
30
ஜன
2016
01:01
ஆத்தூர்: ஆத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில், தை வெள்ளியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆத்தூர், வசிஷ்ட நதி தென்கரையில், பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, தை வெள்ளியை முன்னிட்டு, பெரியமாரியம்மனுக்கு, மண் புற்று அலங்காரம் செய்து, இளநீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு அபி?ஷகம், பூஜைகள் நடந்தது. மாலை, 6 மணியளவில், கல்வி, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், ஆயுள் விருத்தி, தடைகள் நீங்குதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேறக் கோரி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.