Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாபசுவாமி கோவிலில் துவங்கியது ... அரவிந்தர் தங்கிருந்த அறை பார்வையாளர்கள் தரிசனம் அரவிந்தர் தங்கிருந்த அறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஆக
2011
10:08

நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், கடந்த வெள்ளி முதல் நேற்று வரை, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறை, சுதந்திர தின விடுமுறை காரணமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடந்த 12ம் தேதி வெள்ளியன்று இரவு முதல், திருமலையில் குவியத் தொடங்கினர். வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். ஞாயிறன்று காலை முதல், நள்ளிரவு வரை, பக்தர் கூட்டம் திருமலைக்கு வந்தவண்ணம் இருந்ததால், எங்கு பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளெக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பி, இலவச கியூவில் நிற்கும் பக்தர்களின் கூட்டம், கோவிலுக்கு வெளியே 1 கி.மீ., தூரத்திற்கு நின்றிருந்தது. இதனால், ஞாயிறன்று இலவச தரிசன கியூவில் சென்ற பக்தர்கள், 20 மணி நேரமும், சிறப்பு நுழைவு 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள், ஏழு மணி நேரமும் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான நேற்றும், தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருவதால், இன்று பிற்பகல் வரை இந்நிலை நீடிக்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்டு பற்றாக்குறை: கடந்த இரு தினங்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்க குவிந்ததால், லட்டு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்ததை, நேற்று இரண்டாக குறைத்து வழங்கினர்.

ஸ்ரீசைலம் கோவிலில் கூட்டம்: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில், லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். இங்குள்ள பாதாள கங்கையில் நேற்று முன்தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar