விழுப்புரம்: பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. விழுப்புரம் அஷ்டசக்தி விநாயகர் மற்றும் பதினெட்டாம்படி க ருப்பசாமி கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கருப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசணம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கந்தசாமி செய்திருந்தார்.