முத்தியால்பேட்டை சீனிவாசப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 12:02
முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டையில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவிலில், வரும் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முத்தியால்பேட்டை காந்தி வீதியில் சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த பழைம வாய்ந்த கோவில் முழுவதும் மரம், செங்கல் சுண்ணாம்பு இவற்றால் கட்டப்பெற்று மிகுந்த சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய போதிய இடம் இன்றி அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலின் கிழக்கு பக்கம் அதிக இடத்துடன் அமைய வேண்டுமென்ற சிற்ப ஆகம சார்திர முறைப்படியும், பிரசன்னம் பார்த்து கோவிலை கிழக்கு பக்கம் அதிக இடத்துடன் அமைத்திட முடிவு செய்யப்பட்டது. கோவிலில் சீனிவாசப் பெருமாள், அலர்மேல் மங்கைத்தாயார், ரங்கநாதர், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், உற்சவர் சன்னதி, கருடன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பக்கம் மகா மண்டபம் மற்றும் 5 நிலை கொண்ட ராஜ கோபுரத்துடன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.