மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி உற்சவம் இன்று (பிப்.,13) முதல் பிப்.,23 வரை நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுடன், அம்மன், சொக்கர் பிரியாவிடையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி தினமும் மாலை 6.30 மணிக்கு சித்திரை வீதிகளில் பவனி வருவர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.