Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி ... மதுரையில் கலச விளக்கு வேள்வி பூஜை மதுரையில் கலச விளக்கு வேள்வி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்ய கல்யாண பெருமாள் கோவில் மண்டபம் சீரமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
12:02

மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மகா மண்டப சேதத்தை, தொல்லியல் துறை சீரமைத்து வருகிறது.

Default Image
Next News

ரசாயன பூச்சு: மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும்; உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடனும் வீற்றிருக்கிறார்.திருமணம், மகப்பேறு உள்ளிட்ட தோஷங்களுக்கு, பரிகார தலமாக பிரசித்தி பெற்று, பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோவில், வழிபாட்டு நிர்வாக முறை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையிடமும், தொல்லியல் பாரம்பரிய சின்னம், இந்திய தொல்லியல் துறையிடமும் உள்ளன.

கோவிலில் அறநிலையத் துறை சார்பில், திருப்பணி செய்யப்பட்டு, 2006ம் ஆண்டு, ஜூன் மாதம், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2014ம் ஆண்டு கடைசியில், தொல்லியல்துறை சார்பில், கோவிலில் ரசாயன பூச்சு, துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, சிறு சீரமைப்புகளையும் மேற்கொள்ள முடிவெடுத்ததால், அப்பணிகளை திருப்பணியாக கருதி, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது.

புதிய பீம்: இது ஒருபுறமிருக்க, கோவில் மகாமண்டபத்தில், தென்பகுதி மேல்தள தாங்கு பீம் துண்டாகி, பக்தர்கள் மேல் விழும் ஆபத்தான நிலை இருந்தது. எனவே சேதமானதை முற்றிலும் அகற்றி, புதிய பீம் அமைத்து சீரமைக்கும்படி, தொல்லியல்துறையிடம் கோவில் நிர்வாகம் வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, சீரமைப்பிற்கு வசதியாக, அங்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்த உற்சவர், ஆண்டாள் சன்னிதிக்கு மாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது. தொல்லியல் துறையும், மண்டப மேல்தள கற்களை அகற்றி, சேதமான பீம்கள், தாங்கு கற்கள் ஆகியவற்றை அகற்றி, புதிதாக பொருத்தி உள்ளது. மேலும் மண்டபத்தின் மேற்புறம், நான்கு அடி உயரம் கொண்ட மேல்தள பகுதியை, உயரம் குறைத்து சீரமைக்கவும் முடிவெடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar