மதுரை: மதுரை அண்ணாநகர் வெங்கடாசலபதி கோயிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெறப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சீனிவாச பெருமாளுக்கு ரத சப்தமி உத்சவம் நடந்தது.
திருமலையில் கொண்டாடப்படுவது போன்று இங்கு நடந்த இந்த விழாவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் பவனி வந்தார். ஏற்பாடுகளை எம்.ஜி.பாண்டியராஜன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.