பழநி: கார்த்திகையை முன்னிட்டு பழநிமலைக்கோயிலில் 108 திருவிளக்கு பூஜை, திருஆவினன்குடிகோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடந்தது.
திருமுருக பக்தசபா சார்பில் நடந்த திருக்கார்த்திகைவிழாவைமுன்னிட்டுதிருஆவினன்குடி கோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் சனிபகவான், தெட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனை நடந்தது. இதேபோல பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. பகல் 2 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமலைச்சாமி, பேராசிரியர் தேவியின் பக்தி இன்னிசை, சொற்பொழிவு நடந்தது. மாலை 6.30மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. இரவு 7 மணி தங்கரத புறப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகையை முன்னிட்டு பழநிமலைக்கோயிலில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி