பதிவு செய்த நாள்
18
பிப்
2016
11:02
தேவாரம்: தேவாரத்தில் 145 ஆண்டுகள் பழமையான மல்லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேவாரத்தில் சிருங்க தேவமஹரிசி கோத்திரம் முச்சளதவரு வம்சத்தாரால், கடந்த 1861ல் மல்லிங்கேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா, பிப்.14ல் விக்னேஷ்வர பூஜை ,புண்யாஹவாசனத்துடன் துவங்கியது. வேதமந்திரங்கள் முழங்க நேற்று காலை 6.30 மணி முதல் 7.25க்குள் மூலவர் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் தேவகுமார், உபதலைவர் முருகவேல், செயலாளர் மல்லீஸ்வரன், உதவி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பொருளாளர் முருகதாஸ், நிர்வாக கமிட்டியை சேர்ந்த சந்திரசேகரன், ஜெயராம், ஹரிஹரன், செல்வம், மாதவன், ரமேஷ்குமார், பாலு, முருகேசன், மகேஸ்வரன், சிவக்குமார், சஞ்சீவி கணேசன், கணேஷ்குமார், ராஜசேகரன், சத்தியசாந்தமூர்த்தி, மல்லிங்கேஸ்வரன் செய்தனர். பெரிய வீட்டுக்காரர் ராஜகோபால், ஹேமா பர்னிச்சர்ஸ் உரிமையாளர் மல்லிங்கேஸ்வரன், பர்வத மகரிஷி கோத்ரம் கஞ்சுகுல வம்ச தாயாதிகள், பத்திர எழுத்தர் நாகராஜ், தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமீதியின் மாநில செயலாளர் முருகேசன், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயராம், போடி ஏபி ஆக்ரோ நிறுவனத்தினர், சவுடம்மன் கோயில் கமிட்டி உறுப்பினர்கள், கோம்பை தொட்டூர் தேவாங்கர் பொதுமக்கள், இசட்.கே.எம்.மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் கமலநாதன், விசாகன் கேபிள் உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், தாயாதிகள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.