கரூர்: கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்னகாமாட்சியம்மன் கோவிலில், 93ம் ஆண்டு திருவிழா முன்னிட்டு, 15ம் தேதி அமராவதி ஆற்றில் இருந்து கரகம் பாவிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து இரவு, 9 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடந்தது. நேற்று மாலை கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.