திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2011 10:08
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, கோயில்நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் கோயில் வளாக கொடிமரத்தில், ஆவணித்திருவிழா துவக்க கொடியேற்றப்பட்டது. மொத்தம் 12 நாள் திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜை, சுவாமி - அம்பாள் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10ம் நாளான ஆக.28ம் தேதி காலை நடக்கிறது. அன்று சுவாமி குமரவிடங்கப் பெருமான், அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலை சேருவார். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்துள்ளனர்.