பதிவு செய்த நாள்
24
பிப்
2016
11:02
திருவனந்தபுரம்,:சபரிமலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடருவது என, திருவாங்கூர் தேவசம் போர்டு, தந்திரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. சிறப்பு பூஜை கேரள மாநிலம் சபரிமலையில், 10 முதல், 50 வயதுள்ள பெண்களுக்கும் அனுமதி அளிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இது குறித்து விவாதிக்க, திருவாங்கூர் தேவசம் போர்டு தந்திரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தற்போதுள்ள பாரம்பரிய, சம்பிரதாய பூஜைகள், நடைமுறைகள் தொடர வேண்டும் என, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்த பாரம்பரிய முறைக்கு எதிராக கேள்விகள் எழுந்துள்ளதால், மக்களின் மனதை மாற்றுவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். சபரிமலைக்கு, ஓராண்டில், 3.50 கோடிக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்; இதில், மூன்று கோடி பேர், மண்டல பூஜை காலத்தின் போது வருகின்றனர்.