பதிவு செய்த நாள்
25
பிப்
2016
12:02
க.பரமத்தி: க.பரமத்தி யூனியனுக்கு உட்பட்ட குப்பம் பெரியகாண்டியம்மன் கோவிலில் மஹா பூஜை சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். க.பரமத்தி அடுத்த குப்பத்தில் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். இந்நிலையில் இக்கோவிலில் ஆண்டு தோறும், மாசி மஹா பூஜை சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். விழாவையொட்டி நேற்றைய முன்தினம் காலை, 7 மணிக்கு பால்குடம், நீர் குடம், மஞ்சள் குடம் கொண்டு வரப்பட்டு, 18 வகை மூலிகை பொருட் களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகாண்டியம்மன், விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார், கருப்பண்ணார் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரூர், கோவை, திருச்சி,ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.