புதுச்சேரி: தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. புதுச்சேரியில் நடந்த மாசி மக விழாவில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் பங்கேற்று தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து புதுசாரம் நடுத்தெரு சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில், எழுந்தருளிய பொய்யாமொழி விநாயகருக்கு, மாசிமகம் வரவேற்பு குழு சார்பில், நேற்று மகாகணபதி ஹோமம், 108 கலச அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 108 கலச ஆவாகஹனம், யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை 11:00 மணிக்கு 96 வகை மூலிகை ஷன்னவதி ஹோமங்கள், பகல் 12:00 மணிக்கு கலசப்புறப்பாடு, பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது.