Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ... தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம் கோலாகலம்! தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா தொடக்கம்!

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
10:02

நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரளாவை சேர்ந்த பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி இங்கு வந்து கடலில் குளித்து அம்மனை வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களில் ஏராளமானோர் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.

இங்கு நடைபெறும் முக்கிய திருவிழா மாசிக்கொடை விழா. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் பூஜிக்கப்பட்ட கொடியை பூஜாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொடிமரத்தில் மேல்சாந்தி சட்டநாதன்குருக்கள் கொடியேற்றினார். அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. வரும் நான்காம் தேதி இரவு பெரிபடுக்கை பூஜையும், ஏழாம் தேதி இரவு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. எட்டாம் தேதி ஒடுக்கு பூஜையுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்று விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பத்து நாட்களும் நடைபெறும் இந்து சமய மாநாட்டை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விழா பாதுகாப்புக்காக நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar