Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... சிங்கப்பூரில் ரூ.4 கோடிக்கு விற்ற உமா பரமேஸ்வரி சிலை மீட்பு! சிங்கப்பூரில் ரூ.4 கோடிக்கு விற்ற உமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
வீரபாண்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்!

பதிவு செய்த நாள்

01 மார்
2016
11:03

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருக்குட நீராட்டு பெருவிழா பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பெரியநாயக்கன்பாளையம் அருகே எண்.4 வீரபாண்டியில் பழமையான, புகழ் பெற்ற வீரபாண்டி மாரியம்மன் கோவில் உள்ளது.  கண்நோய், வெப்பநோய் கண்டவர்கள் இக்கோவில் மாரியம்மனை வணங்கினால், நோய் நீங்கி, குணம் பெறுவார்கள் என்பது ஐதீகம். கூரை வேயப்பட்ட கட்டடத்தில் இருந்த இக்கோவிலுக்கு புதிய கருவறை மற்றும் முன் மண்டபம் எழுப்பி, 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கோவில் முன் புதியதாக வசந்த மண்டபம், குறிஞ்சி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளன. இது தவிர, கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம், விமானம், மாகாளியம்மன் விமானம், சுற்றுத் தெய்வக்கோவில்கள், தோரணவாயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பரந்துபட்டுள்ள அருளாற்றலை வேள்விக்குண்டத்தில் இறக்கி, பின், புனிதநீர் உள்ள திருக்குடத்தில் செலுத்தியபின், தெய்வத் திருமேனியில் முழுக்காட்டலே திருக்குட நீராட்டு விழா எனப்படுகிறது. இம்மாதம், 7ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்குகிறது. மார்ச், 11- காலை, 9:00 மணியிலிருந்து, 10:30 மணிக்குள் திருக்குட நீராட்டு விழா நடக்கிறது. விழாவையொட்டி, புதியதாக வேள்விச்சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விழாவில், ராசு அடிகள், குமரகுருபர சுவாமி, மருதாசல அடிகள், முத்துசிவராமசாமி சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார், செயல் அலுவலர், திருப்பணி உபயதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar