Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி மாரியம்மன் கோவில் ... பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா துவக்கம் பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கப்பூரில் ரூ.4 கோடிக்கு விற்ற உமா பரமேஸ்வரி சிலை மீட்பு!
எழுத்தின் அளவு:
சிங்கப்பூரில் ரூ.4 கோடிக்கு விற்ற உமா பரமேஸ்வரி சிலை மீட்பு!

பதிவு செய்த நாள்

01 மார்
2016
11:03

சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டு, சிங்கப்பூர் அருங்காட்சியகத்திற்கு, நான்கு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட உமாபரமேஸ்வரி பஞ்சலோக சுவாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர்.

அரியலுார் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள, பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து, பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த, தேவி என்ற உமா பரமேஸ்வரி உள்பட எட்டு பஞ்சலோக சுவாமி சிலைகளை, அமெரிக்காவில் வசித்து வந்த, இந்திய வம்சாவளியை சேர்ந்த, சுபாஷ் கபூர் கடத்தி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருந்தான். சில ஆண்டுகளுக்கு முன், அவனை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சர்வதேச போலீசார் உதவியுடன் ஜெர்மனியில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஜாமின் கிடைக்காமல், தற்போதும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறான்.

அவன் கைது செய்யப்பட்டபோது, உமா பரமேஸ்வரி பஞ்சலோக சிலையை, சிங்கப்பூர் அருங்காட்சியத்திற்கு, அமெரிக்க டாலர் மதிப்புபடி, நான்கு கோடி ரூபாய்க்கு சுபாஷ் கபூர் விற்பனை செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், உமாபரமேஸ்வரியின் சிலை, ஸ்ரீபுரந்தான், பிரகதீஸ்வரர் கோவிலில் திருடப்பட்டது தான் என்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் நிரூபித்து, தமிழக அரசு மூலம், சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பி வைத்தனர். தமிழக அரசின் உரிமையை ஏற்று, சிங்கப்பூர் ஏசியன் சிவிலிஷேசன்ஸ் அருங்காட்சியக அதிகாரிகள், அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த, பிரதமர் மோடியிடம்  ஒப்படைத்தனர். இதையடுத்து, உமாபரமேஸ்வரியின் சிலை டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சிலையை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்,  தமிழகத்திற்கு எடுத்து வந்து, கும்பகோணம் நீதிமன்றத்தில், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன் காட்டினர். பின், அங்குள்ள நாகேஸ்வர சுவாமி கோவில், ஐகான் மையத்தில், நீதிமன்ற பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar