பதிவு செய்த நாள்
02
மார்
2016
10:03
கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா, இன்று நடக்கிறது. கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிப்., 2ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியோடு துவங்கியது. பிப்., 23ம் தேதி கொடியேற்று விழாவும், அக்னிச்சாட்டும் நடந்தது. பிப்., 26ல் திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருவிழா நாட்களில் அன்றாடம், அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மதியம், 2:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ராஜவீதி தேர்நிலைத்திடலில், மதியம் 2:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக, தேர்நிலையை அடைகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளையபட்டம் மருதாசல அடிகள், அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, சட்டசபை துணைத்தலைவர் ஜெயராமன், மேயர் ராஜ்குமார் முன்னிலை வகிக்கின்றனர். இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, எம்.எல்.ஏ.,க்கள்., எம்.பி.,க்கள் பங்கேற்கின்றனர்.