மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் மாசி விசாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 11:03
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மாசி விசாக வழிபாடு நடைபெற்றது. மாசி விசாக நட்சத்திர நாளான, நேற்று முன்தினம், உலக நன்மை வேண்டி, இக்கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது. மகா மண்டபத்தில், மாலை, 4:00 மணிக்கு, தேவியருடன் சுவாமி எழுந்தருளினார்; சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது. பக்தர்கள் தரிசித்தனர்.