Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செப்.2ல் நெருஞ்சிக்குடி அய்யனார் ... அரசு வேம்புக்கு தெய்வ திருமணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயிலில் 1ம் தேதி பெருங்கொடை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2011
11:08

வள்ளியூர் : சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயிலில் வரும் 1ம் தேதி ஆவணி பெருங்கொடை விழா துவங்குகிறது. சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா வரும் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக 1ம் தேதி மாலை 4 மணிக்கு கும்பாபிஷேக சிறப்பு பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை உவரி சுயம்புலிங்கசுவாமி அண்ணாமலை குருக்கள் நடத்துகிறார். இரவு 9 மணிக்கு அம்பாசமுத்திரம் மணி முருகனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு பால் அபிஷேக பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமபடைப்பு பூஜையும் நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக காமராஜர் கலையரங்கத்தில் இரவு 8 மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரியும், இரவு 11 மணிக்கு "குடும்ப மேம்பாட்டிற்கு காரணம் கணவனின் நிதியா, மனைவியின் மதியா என்ற இசை பட்டிமன்றம் நடக்கிறது. சுடலை ஆண்டவர் கலையரங்கில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து திரைப்பட இன்னிசைக்கச்சேரியும் நடக்கிறது. மூன்றாம் நாள் காலையில் சுவாமி வீதியுலாவும், பொங்கல் பூஜையும் நடக்கிறது. முன்னதாக கொடைவிழாவிற்கான கால்நாட்டு விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar