கடலுார்: கடலுார் முதுநகர் காமாட்சி அம்மன் கோவிலில் கிண்ணித்தேர் பிரம்மேற்சவம் நேற்று துவங்கியது. அதனையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான கிண்ணித் தேர் உற்சவம் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை சுப்ரமணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலாவும், இரவு 7:00 மணிக்கு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து உற்சவர் தேருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடக்கிறது. பின்னர் இரவு 1:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கிண்ணித் தேரில் சுவாமி வீதியுலா நடக்கிறது.