Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ ... வில்வநாதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் காலத்து கோவில்: பராமரிக்க நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

தலைவாசல்: தலைவாசல் அருகே, பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட நயின நாராயண பெருமாள் கோவிலை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள நாவக்குறிச்சி கிராமத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது நயின நாராயண பெருமாள் கோவில். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில், 1,400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இன்று எவ்வித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. கோவிலின் தேர் இடிந்துள்ளதுடன், நித்திய பூஜைகள் கூட நடப்பது இல்லை. சன்னிதானத்தின் மேல் தளத்தில், பாண்டியர்களின் சின்னமாகிய மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புராதன சின்னங்கள் சரிவர பாதுகாக்கப்படாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவிலுக்கு, மானியங்கள் இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. கோவிலில் பூஜைகள் செய்ய குருக்கள் கூட இல்லை. பாண்டியர் காலத்து பழமை வாய்ந்த கோவிலை பராமரித்து, அனைத்து கோவில்கள் போலவே வழிபாடுகள் நடத்த ஆவன செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அவ்வூரில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், இந்த கோவிலை கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். முறைப்படி, இந்த கோவிலுக்கென்று, குருக்களை அமர்த்த வேண்டும். உள்ளே கோவில் வளாகத்தை சுற்றிலும் செடி, புதர்கள் வளர்ந்துள்ளது. இதை அகற்றி சுத்தம் செய்வதுடன், பாண்டியர் காலத்திய சின்னங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar