பழநி: பழநி சிவன்கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30 மணிக்கு நந்தி பகவான், மூலவருக்கும் பிரதோஷவேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன்பார்வதி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷப வாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமாமகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, திருஆவினன்குடி, புதுநகர் சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.