Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ ... கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2016
12:03

திருப்பூர்: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில், கிறிஸ்தவர்கள் பாடல் பாடியபடி, ஊர்வலம் சென்றனர். குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் மற்றும் புனித வெள்ளி ஆகிய நாட்களை, கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் இறுதியாக, புனித வாரம் நேற்று துவங்கி, 26 வரை கடைபிடிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்ரீன் தேவாலயத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது; ஏராளமான கிறிஸ்தவர்கள், கைகளில் குருத்தோலை ஏந்திபடி, ஊர்வலமாக சென்று, பங்கேற்றனர். தேவாலயத்தில் துவங்கிய ஊர்வலம், பார்க் ரோடு, காதர்பேட்டை, டவுன்ஹால் வழியாக, மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. அதன்பின், பொது மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல், அவிநாசி ரோடு, கோர்ட் வீதி உள்ளிட்ட, நகரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அவிநாசியில் உ ள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் தேவாலயம் சார்பில், குருத்தோலை ஞாயிறு தினம், நேற்று கொண்டாடப்பட்டது; மேற்கு ரத வீதியில் துவங்கிய ஊர்வலம், மெயின் ரோடு, கிழக்கு, வடக்கு ரத வீதி, கச்சேரி வீதி வழியாக, சி.எஸ்.ஐ., ஆலயத்தை அடைந்தது. ஊர்வலத்தை, ஆயர் எட்வின் ராஜ்குமாரும், சிறப்பு பிரார்த்தனையை, ஆயர் ரூபன் சாமுவேலும் துவக்கி வைத்தனர். திருப்பலியில் பக்தர்கள் பங்கேற்று, ஆராதனை பாடல் பாடினர். அவிநாசி, பழங்கரை, கருவலூர், கணியாம்பூண்டி, துலுக்கமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar