Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லை பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு ... ரமலான் சிந்தனைகள்: கடமையை சரிவர செய்க! ரமலான் சிந்தனைகள்: கடமையை சரிவர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
10:08

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணிதிருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அறுபடை வீடுகளில் முக்கியமான 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகருக்கு சண்முக விலாசத்தில் வைத்து தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் மண்டகப்படிதாரர்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலையில் சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரினம் செய்தனர். பின்னர் இரவு சண்முகர் வெள்ளை சாத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். விழாவில் இன்று அதிகலை 5.30 மணிக்கு வெள்ளிசப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். இன்று பச்சை சாத்தி நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். விழாவில் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் 27ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தினசரி காலை மாலை சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar