புதுச்சேரி : பாரதி வீதி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. சுந்தர விநாயகர் கோவில் மகாகும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் 12 மணி வரை 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன், சுந்தர விநாயகர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் கோவிந்தசாமி, நிர்வாக பரிபாலகர் ஐயப்ப குருசாமி சுந்தர ரத்தின சபாபதி, சுசிலாபாய் ஆகியோர் செய்தனர்.