திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டனானேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு, சோமஸ்கந்தர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 7:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சு ப்ரமணியருக்கு வேதமந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. இந்துசமய அறநிலையத்துறை செயல் அ லுவலர் ராமலிங்கம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.