Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் : சொர்க்கத்தில் ... ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் ஆண்டு பிரம்மோற்சவம் ஆர்ஜித சேவைகள் 9 நாட்கள் ரத்து
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஆக
2011
10:08

நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் செப்டம்பர் 29 முதல் சிறப்பு வைபவமாக நடத்தப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி, எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். திருமலை கோவிலில், செப்டம்பர் 29 (புரட்டாசி 12) முதல் அக்டோபர் 7 வரை, 9 தினங்கள் நடைபெற உள்ள, பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து, நிர்வாக அதிகாரி, இணை நிர்வாக அதிகாரி சீனிவாசன், நேற்று முன்தினம் (சனியன்று) திருமலையில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: திருமலை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கோவிலில் சுவாமிக்கு நடத்தப்படும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி., தரிசனம், 9 தினங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. விருந்தினர் மாளிகை, தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, திருப்பதி - திருமலை இடையே, 386 ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படும். திருமலை மலைப்பாதையில் வாகன நெரிசல், விபத்துக்களை தவிர்ப்பதற்காகவும், கருடசேவை தினத்தன்று இருசக்கர வாகனங்கள், லாரி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு, திருப்பதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து, அலிபிரி டோல்கேட் வரை, பக்தர்களுக்கென தனி வழி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அலிபிரி டோல்கேட், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழிகளில், பக்தர்களின் உடமைகளை திருமலைக்கு அனுப்பி வைக்க, சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, திருமலையில் கூடுதலாக, மேலும் ஒரு (மடம் போன்ற) விசாலமான வளாகம் ஏற்படுத்தப்படும்.

முன்பதிவு ரத்து: பிரம்மோற்சவத்தையொட்டி, சென்னை உட்பட, நாட்டின் பல நகரங்களில் உள்ள தேவஸ்தான முன்பதிவு மையங்களில், 50 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும், தங்கும் விடுதி ஆகியவற்றுக்கான முன்பதிவு செய்யப்படவில்லை. செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரை, திருமலைக்கு வரும் பக்தர்கள், மூலவர் தரிசனத்தை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை(அக்.2)க்காக, தரிசன டிக்கெட் பெறுவதற்காக, முன்பதிவு மையங்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar