Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் ... புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் தேரோடும் வீதியில் கேமரா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2016
12:03

அவிநாசி: அவிநாசியில் தேரோட்டம் நடக்கும் வீதிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, போலீசார் வலியுறுத்தினர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 12ல் துவங்கி, 23 வரை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது; தாசில்தார் சண்முகம் தலைமை வகித்தார். அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி முன்னிலை வகித்தார். போலீசார் பேசுகையில், "தேர் வலம் வரும் நான்கு வீதிகளிலும், பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். தேரோட்டம் நடக்கும் இரண்டு நாளிலும், தேருக்கு முன் அல்லது பின், யாரும் அன்னதானம் வினியோகிக்கக் கூடாது; பொதுவான இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும் என்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், ""பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார ஏற்பாடு, தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். தேரோட்டம், அன்னதானம் முடிந்ததும், நான்கு ரத வீதிகளிலும் உடனுக்குடன் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்படும், என்றார். தேர் ஓடும் வீதிகளில் குறுக்காக உள்ள மின்கம்பிகளை தற்காலிகமாக கழற்றி, மீண்டும் பொருத்தவும், கேபிள் "டிவி நிர்வாகத்தினர், தங்களது கேபிள்களை மாற்றிக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. தேர் ஜன்னை, சக்கரத்துக்கு கட்டை கொடுப்போர், பலகை இழுப்போர் ஆகியோருக்கு "பேட்ஜ் வழங்க முடிவு செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் தற்காலிக தீயணைப்பு நிலையம், மருத்துவமனை அமைக்கப்படுகிறது. கோவில் செயல் அலுவலர் அழகே சன், எஸ்.ஐ., விஜயபாஸ்கர், முன்னாள் அறங்காவலர்கள் ராமசாமி, நடராஜன், மின்வாரிய உதவி பொறியாளர்கள் சிவக்குமார், நவநீதகிருஷ்ணன், தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) நவீந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி, சிவாச்சார்யார்கள் சிவக்குமார், திருநாவுக்கரசு, ராயம்பாளை யம், புதுப்பாளையம் ஜன்னை மிராஸ்தார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar