பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
சங்ககிரி: சங்ககிரி அருகே, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அக்னி சட்டி ஏந்தி, ஏராளமான பக்தர்கள், நேற்று ஊர்வலம் சென்றனர். சங்ககிரி, சந்தைப்பேட்டையில் செல்லாண்டியம்மன், ஸ்ரீபுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை, தினசரி நடந்தது. பதினைந்தாம் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால்குடம், பூங்கரகம், காளி வேடம் அணிந்து, சங்ககிரி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை சேத்துமுட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் விழா நடைபெற உள்ளது.