சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே பி.ஆர்.ஆர்., நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உலக அமைதிக்காவும், மழை பெய்ய வேண்டியும் கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பக்தர்களுக்கு காப்பு வழங்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்தனர்.